திங்கள், 10 செப்டம்பர், 2012

அன்போடு வாழவேண்டும்


அன்புடன் அமைந்த வாழ்க்கை என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு-----பாமரன் பொருள்
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு----குறள் 75



எலும்பில்லா புழுவை வெயில் வாட்டுவது போல
அன்பில்லாதவர்களை அறம் வாட்டும்----பாமரன் பொருள்

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்------குறள் 77


உள்ளன்பு இல்லாது உயிர்வாழ்வது பாலைவனத்தில்
காய்ந்த மரம்துளிர்ப்பது போன்றது----பாமரன் பொருள்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று-----குறள் 78

உடலுறுப்புகள் எல்லாம் என்னசெய்யும்
உள்ளத்தில் அன்பு இல்லாதவருக்கு------பாமரன் பொருள்
புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில வர்க்கு------குறள் 79


அன்பின் வழி செல்லும் உயிர் அவ்வாறில்லாதவர்க்கு
எலும்புதோல் போர்த்திய உடம்பு-----பாமரன் பொருள்
அன்பின் வழியது உயிர் நிலை அஃதில்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு-----குறள் 80

4 கருத்துகள்:

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

அன்பைப் பற்றிய அழகிய குறள்கள்.. விளக்கங்களோசு சூப்பர்.

Unknown சொன்னது…

athira said...
''அன்பைப் பற்றிய அழகிய குறள்கள்.. விளக்கங்களோ சூப்பர்.''

உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அன்போடு வாழவேண்டும்
அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//"அன்போடு வாழவேண்டும்"
அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.