வெள்ளி, 26 அக்டோபர், 2012

நல்லுதவியை மறப்பது நல்லதல்ல


மறவாதீர் குற்றமற்றவரின் நட்பு,விட்டுவிடாதீர்
துன்பத்தில் உதவி செய்தவர் நட்பு
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு   குறள்     106

எந்நாளும் எப்போதும் நினைப்பர் நம்முடைய
துன்பம் போக்கியவர் நட்பு
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.         குறள்   107

நல்லுதவியை மறப்பது நல்லதல்ல தீமையை
அப்பொழுதே மறப்பது நல்லது.
நன்றிமறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.         குறள்   108

கொலைபோன்ற தீமை செய்தாலும் அவர் செய்த
நன்மை ஒன்றை நினைத்தால் கோபம்போகும்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்.        குறள்  109

எந்த அறத்தை அழித்தாலும் வாழ்க்கை உண்டு வாழ்வில்லை
செய்த உதவியை மறந்தவருக்கு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்  உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு        குறள்  110

நடுநிலை எனபது நல்லது  பலதிறம்பட்டவருடன்
இணைந்து பழகும் போது
தகுதிஎன ஒன்றுநன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப்பெறின்             குறள்-111
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.