புதன், 19 ஜூன், 2013

பிறர்பொருளைக் கவர்ந்தால் குடும்பம் கெட்டுவிடும்



நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.   குறள் 171
நடுநிலை இன்றி பிறர்பொருளைக் கவர்ந்தால் குடும்பம் கெட்டு
குற்றமும் அங்கே வரும்.                  பாமரன் பொருள்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.  குறள் 172
கிட்டும் பயன்கருதிக் கவர்ந்து பழிச் செயல் செய்யார்
நடுநிலை வேண்டு பவர்.                பாமரன் பொருள்


சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். குறள் 173
சிற்றின்பத்தை விரும்பி அறமில்லாததைச் செய்யமாட்டார்
அறவழி வரும் நிலையான இன்பம் வேண்டுபவர்  பாமரன் பொருள்


இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். குறள் 174
இல்லையே யென்று கவர்ந்திடமாட்டார் ஐம்புலன் வென்ற
குற்றமில்லாக் காட்சியை உடையவர்.           பாமரன் பொருள்


அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.  குறள் 175
நுண்ணிய, விரிந்த அறிவால் என்ன பயன், யாரிடமும்
கவரும் தீச்செயல் செய்தால்.                   பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.