புதன், 26 ஜூன், 2013

தீயசெயல்கள் தீயைவிடக் கொடியதாக அஞ்சவேண்டும்.




 

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.        குறள் # 201.
தீயவர்கள் அஞ்சமாட்டார் சான்றோர் அஞ்சுவர்
தீயவை எனும் மயக்கத்தைச் செய்ய.  பாமரன் பொருள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.    குறள் # 202
தீயசெயல்கள் தீமையை விளைவிப்பதால் தீயசெயல்கள்
தீயைவிடக் கொடியதாக அஞ்சவேண்டும்.  பாமரன் பொருள்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.     குறள் # 203.
எல்லா அறிவிலும் தலையாய அறிவு தீமை
செய்பவருக்கும் தீமை செய்யாது விடுவது. பாமரன் பொருள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.    குறள் # 204
மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது, நினைத்தால்
அறமே நினைத்தவனுக்குக் கேட்டைத் தரும்.    பாமரன் பொருள்.

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.   குறள் # 205
இல்லாதவன்என்று தீமைசெய்யாதீர், செய்தால்
மேலும் இல்லாதவனாகி வருந்துவீர்.    பாமரன் பொருள்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். குறள் # 206.
தீச்செயல்களைத் தான் பிறருக்கு செய்யாதீர், துன்பந்தரும்
தீவினைகள் தன்னைத் தாக்க விரும்பாதவபர்.   பாமரன் பொருள்.

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வியாது பின்சென்று அடும்.     குறள் # 207
எவ்வளவு கொடிய பகைஉடையவரும் தப்பமுடியும், தீவினைப்பகை
நீங்காது பின்சென்று வருத்தும்.   பாமரன் பொருள்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வியாது அடிஇஉறைந் தற்று.   குறள் # 208
தீச்செயல்கள் செய்தவர் அழிவது நிழல்அவரை
விடாது காலடியில் தங்கியதைப் போன்றது.  பாமரன் பொருள்.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.    குறள் # 209.
தன்னைத்தான் விரும்பி வாழ்பவனாயின் எவ்வளவு சிறிதாயினும்
தீச்செயல் பிறருக்கு செய்யக்கூடாது. பாமரன் பொருள்.


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.   குறள் # 210.

கேடுஇல்லாதவன் என்று அறிக, தவறான வழிச்சென்று
தீச்செயல் செய்யான் எனில்.  பாமரன் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.