புதன், 24 ஜூலை, 2013

யாரிடமும் கோபத்தை தவிர்ப்போம்.

                   அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல்.                               அதிகாரம்: வெகுளாமை. (சினங்கொள்ளாமை)
                              குறள் 301 முதல் 305 வரை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.      குறள் # 301
பலிக்கும் இடத்தில் கோபம் கொள்ளாதவனே சினங்காப்பான் பலிக்காதஇடத்தில்
கோபத்தை அடக்கினால் என்ன அடக்காவிட்டால் என்ன.     பாமரன் பொருள்

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.               குறள் # 302
பலிக்காத இடத்தில் கோபம் தீமையானது, பலிக்குமிடத்திலும்
கோபத்தைவிட தீயது வேறுஇல்லை.        பாமரன் பொருள்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.        குறள் # 303
யாரிடமும் கோபத்தை தவிர்ப்போம். தீமைகள்
விளைவது கோபத்தால் வரும்.       பாமரன் பொருள்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.     குறள் # 304
முகமகிழ்வும் மனமகிழ்வும் கெடுக்கும் கோபத்தைவிட
பகையானது வேறு உண்டோ.         பாமரன் பொருள்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.     குறள் # 305
தன்னை காக்கவிரும்பினால் கோபத்தை அடக்குக, அடக்காவிட்டால்
தன்னையே அழிக்கும் கோபம்.         பாமரன் பொருள்.

1 கருத்து:

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said... '' அருமை... வாழ்த்துக்கள்...''
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. (இந்நன்றியைப் பதிவிட உதவியமைக்கு தனி நன்றி)

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.