புதன், 14 ஆகஸ்ட், 2013

பிறவித் துன்பம் போக்க முயல்பவருக்கு உடம்பே சுமையல்லவா

குறள் பால்; அறத்துப் பால்   குறள் இயல்; துறவறவியல் 
அதிகாரம்; துறவு    
குறள் வரிசை;341 முதல் 345 வரை

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.       குறள் # 341
எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்றுநீங்கியவன் துன்புறுவது அந்தந்த பொருளால் ஏற்படுவதில்லை.     பாமரன் பொருள்

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.    குறள் # 342.
இன்பங்கள் வேண்டின் பொருள்கள் உள்ள பொழுதே துறக்கவேண்டும் துறந்தபின்  இங்கு பெறக்கூடிய இன்பங்கள் பல       பாமரன் பொருள்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.     குறள் # 343
ஐம்புலன்களை அடக்கவேண்டும் ஐம்புலன்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய பொருள்களையும் ஒரு சேர விடவேண்டும்.     பாமரன் பொருள்


இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.       குறள் # 344
இயல்பானதாகும் தவத்திற்கு பற்றுஇல்லாமை. பற்று உடையவராதல்
பற்றுக்களைப் பெருக்கி மயங்கச் செய்யும்      பாமரன் பொருள்
(தவத்திற்கு பற்றில்லாமை இயல்பானது பற்று உடையவராதல் பற்றுக்களைப் பெருக்கி மயங்கச் செய்யும்)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுத்தல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.      குறள் # 345
மேலும் வேறுதொடர்பு எதற்காக? பிறவித் துன்பம் போக்க
முயல்பவருக்கு உடம்பே சுமையல்லவா.    பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.