திங்கள், 26 மே, 2014

மறதி புகழை அழிக்கும்

   பொருட்பால்              அரசியல்          அதிகாரம்; பொச்சாவாமை
குறள் 531 முதல் 540 வரை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு     குறள் # 531
அளவுக்கதிகமான கோபத்தைவிட தீமையானது- மிகுந்த
மகிழ்ச்சியில் வரும் மறதி.      பாமரன் பொருள்


பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்பக்கொன் றாங்கு        குறள் # 532
மறதி புகழை அழிக்கும்- அறிவை
தொடர்ந்து வரும் வறுமை கொல்வதுபோல.   பாமரன் பொருள்

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.     குறள் # 533
மறதிஉள்ளவர்களுக்கு புகழ்உடைமை இல்லை அது உலகிலுள்ள
எத்துறை அறிஞர்க்கும் முடிவான கருத்தாகும்     பாமரன் பொருள்

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு      குறள் # 534
மனதில் பயம் உள்ளவர்களுக்கு அரணிருந்தும் பயனில்லை அதுபோல
மறதிஉள்ளவர்களுக்கு நல்நிலையிருந்தும் பயனில்லை. பாமரன் பொருள்

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.     குறள் # 535
துன்பங்கள் வரும் முன்பே அறிந்து காக்க மறந்தவன் அத்துன்பம்
வந்தபோது தன்பிழையை எண்ணி வருந்துவான்.    பாமரன் பொருள
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.    குறள் # 536
யாரிடமும் எப்போதும் மறவாமை தவறாமல் பொருந்தி
இருக்குமேயானால் அதற்குஒப்பானது ஏதுமில்லை. பாமரன் பொருள்

அரிய என்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.   குறள் # 537
அரியவைஎன்று முடியாத செயல் இல்லை மறவாமையெனும்
கருவிகொண்டு அக்கறையுடன் செய்தால்.  பாமரன் பொருள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.    குறள் # 538
சான்றோர்புகழ்ந்தவற்றை விரும்பிச் செய்யவேண்டும் செய்யாது
மறந்தவர்களுக்கு ஏழுபிறப்பிலும் நன்மைஇல்லை.   பாமரன் பொருள்

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.     குறள் # 539
மறந்துபோய் அழிந்தவர்களை நினைக்கவேண்டும் தாம்தம்
மகிழ்ச்சியில் கடமையை மறந்திருக்கும் போது.   பாமரன் பொருள்

உள்ளியது எய்தல் எளிதுமண் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.        குறள் # 540
நினைத்ததை  நினைத்தபடி அடைதல் எளிதாகும் தான்
நினைத்ததை விடாது நினைத்திருக்க முடியுமெனில்.   பாமரன் பொருள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.