ஞாயிறு, 29 மார்ச், 2015

துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார் தெளிந்த அறிவுடையவர்


பொருட்பால்  
அமைச்சியல்  
வினைத்தூய்மை  

குறள் 651 முதல் 660 வரை


துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்    குறள்  # 651
ஒருவருக்கு நல்லதுணை வலிமையைத் தரும் நற்செயல்
விரும்பிய எல்லாம் தரும்.       பாமரன் பொருள்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.       குறள் # 652
என்றும் விட்டொழிக்க வேண்டும், புகழையும்
நன்மையையும் தராத செயல்களை.     பாமரன் பொருள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு பவர்.     குறள்  # 653
மேன்மையை அழிக்கும் செயலை விட வேண்டும் செயலில்
மென்மேலும் உயர முயல்பவர்         பாமரன் பொருள்


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.        குறள் # 654

வியாழன், 12 மார்ச், 2015

பேச்சில் தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


பொருட்பால்   அமைச்சியல்    சொல்வன்மை   குறள் 641 முதல் 650 வரை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.      குறள் 641
நாவன்மை ஒருவகைச் செல்வம் அந்த தனிச்சிறப்புடைய நாநலம்
எந்த நலங்களிலும் அடங்குவது அன்று         பாமரன் பொருள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.      குறள் # 642
நன்மையும் கேடும் சொல்லால் வருவதால்
பேச்சில் தவறு வராமல் காத்துக்கொள்ள வேண்டும். பாமரன் பொருள்